அன்னூர் ஒன்றியம், ஆனையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுவின் புதிய உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. அருணாதேவி தலைவராகவும், மூர்த்தி துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
கோவை: அன்னூர் ஒன்றியம், ஆனையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் அ.அனிட்டா தலைமை வகித்து, பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு தேர்வு நடத்தும் அலுவலராக செயல்பட்டார்.
தேர்வு நடைபெறுவதற்கு முன், அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், வருகை பதிவு, கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், உறுப்பினர் தேர்வுக்கான தகுதிகள் மற்றும் காலஅவகாசம் ஆகியவை பற்றி விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்வு நடைபெற்றது.

தேர்வில் பள்ளி மேலாண்மைக் குழுவின் புதிய தலைவராக அருணாதேவி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக மூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், புதிதாக தேர்வு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த தேர்வு நிகழ்வு, பள்ளியின் நிர்வாகத்தில் பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் பங்களிப்பை உறுதி செய்வதோடு, கல்வி மேம்பாட்டிற்கான முக்கிய படியாகவும் கருதப்படுகிறது.
தேர்வு நடைபெறுவதற்கு முன், அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், வருகை பதிவு, கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், உறுப்பினர் தேர்வுக்கான தகுதிகள் மற்றும் காலஅவகாசம் ஆகியவை பற்றி விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்வு நடைபெற்றது.
தேர்வில் பள்ளி மேலாண்மைக் குழுவின் புதிய தலைவராக அருணாதேவி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக மூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், புதிதாக தேர்வு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த தேர்வு நிகழ்வு, பள்ளியின் நிர்வாகத்தில் பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் பங்களிப்பை உறுதி செய்வதோடு, கல்வி மேம்பாட்டிற்கான முக்கிய படியாகவும் கருதப்படுகிறது.