கோவை மாநகராட்சி ஆணையாளர் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்

கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை 24.08.2024 அன்று நேரில் ஆய்வு செய்தார். சமுதாயக் கழிப்பிடம், மழைநீர் வடிகால், அம்மா உணவகம் புனரமைப்பு உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மற்றும் வடக்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (24.08.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.





இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டலம், வார்டு எண்.50க்குட்பட்ட உடையாம்பாளையம் பகுதியில் தூய்மை இந்தியா (2.0) (Swachh Bharat Mission-SBM) திட்டத்தின்கீழ் ரூ.21.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கழிப்பிடம் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவருவதை பார்வையிட்டார்.





வார்டு எண்.60க்குட்பட்ட உப்பிலிபாளையம், காவலர் குடியிருப்பு, ராஜுவ்காந்தி நகர் பகுதியில் பொதுநிதியிலிருந்து ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் 330 மீட்டர் தொலைவிற்கு மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள் மற்றும்



வார்டு எண்.53க்குட்பட்ட மசக்காளிபாளையம் பகுதியில் பொதுநிதியிலிருந்து ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டில் அம்மா உணவகம் புனரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.



மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.





மேலும், அம்மா உணவகத்தின் உணவுப் பொருட்களின் இருப்பு பதிவேடுகளையும் மற்றும் அங்கு தயாரிக்கப்படும் உணவுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.





கிழக்கு மண்டலம், வார்டு எண்.53க்குட்பட்ட மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகத்தில் நிழற்கூடம் அமைப்பதற்கு உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.





உக்கடம் பெரியகுளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை அகற்றும் பணிகளுக்கு ஹிட்டாச்சி வாகனத்தில் சல்லடைவாளி பொருத்தப்பட்டுள்ளதை ஆய்வு செய்து, ஆகாயத்தாமரைகளை விரைவாக அகற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



வடக்கு மண்டலம், வார்டு எண்.26க்குட்பட்ட கணபதி மோர் மார்க்கெட் சத்தி பிரதான சாலை பகுதியில் உள்ள சிறுபாலம் அடைப்பு ஏற்பட்டுள்ளதையும்,





கணபதி, கணேஷ் லே-அவுட் பகுதியில் 177 மீட்டர் தொலைவிற்கும், நடராஜ்கவுண்டர் வீதியில் 220 மீட்டர் தொலைவிற்கும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் கட்டுமானப்பணியினையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது, பணிகள் குழு தலைவர் சாந்திமுருகன், நகர் நல அலுவலர் (பொ) மரு.கே.பூபதி, உதவி ஆணையர்கள் முத்துச்சாமி(கிழக்கு), ஸ்ரீதேவி(வடக்கு), (பொ)இளங்கோவன்(தெற்கு), செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர்கள் ராஜேஸ்கண்ணா, எழில், கனகராஜ், சவிதா, மாமன்ற உறுப்பினர்கள் கீதா சேரலாதன், சிவா, மோகன், சரண்யா, கற்பகம், பிரவின்ராஜ், சித்ரா தங்கவேல், மண்டல சுகாதார அலுவலர் (பொ) சந்திரன், உதவி பொறியாளர்கள் கணேசன், கல்யாணசுந்தரம், ஜெகதீஸ்வரி, இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் ஜீவமுருகராஜ், ஜெரால்டு சத்யபுனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தார்கள்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...