உடுமலை அருகே மருள்பட்டி குளத்திற்கு முறைகேடாக தண்ணீர் திறப்பு: விவசாயிகள் அதிர்ச்சி

உடுமலை அருகே மருள்பட்டி குளத்திற்கு முறைகேடாக தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் ஓட்டத்தை தடுத்து, உடைப்பை சரி செய்தனர். விவசாயிகள் விசாரணை கோரினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மருள்பட்டி குளத்திற்கு முறைகேடாக தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.



திருமூர்த்தி அணையில் இருந்து கடந்த 18ஆம் தேதி முதல் இரண்டாம் மண்டல ஆண்டு பாசனத்திற்கு 4 சுற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.



உடுமலை கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டுள்ள நிலையில் மருள் பட்டி கிளை கால்வாய்க்கும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.



இந்நிலையில், இப்பகுதியில் உள்ள குளத்திற்கு திடீரென தண்ணீர் திறக்கப்பட்டது.

விவசாயிகள் கூற்றுப்படி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் திருமூர்த்தி அணையில் இருந்து மருள்பட்டி பாசன கால்வாய்க்கு தண்ணீர் வருகின்றது. சில நேரங்களில் கடைமடைக்கு தண்ணீர் செல்லாமல் இருக்கும் நிலையில், சில தினங்களாக கால்வாயை உடைத்து தற்பொழுது குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் குளத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருந்ததை அடைத்தனர்.



பின்னர் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகள் கொண்டு அடைத்தனர்.

முறைகேடாக தண்ணீர் திறக்கப்பட்டதற்கு யார் அனுமதி வழங்கினார்கள், யார் முறைகேடாக தண்ணீர் திறந்தார்கள் என சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...