மடத்துக்குளத்தில் தொல் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் மற்றும் கொடியேற்று விழா

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனின் 62வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர், தொல். திருமாவளவன் அவர்களின் 62வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



மடத்துக்குளம் பெரியவட்டாரம் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மடத்துக்குளம் பேரூர் செயலாளர் சீட் கவர் சேகர் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் த.சதீஷ்குமார் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன்ஈஸ்வரன், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் சிட்டிபாபு, அரசு போக்குவரத்து கழகம் எல்எல்எப் மாநில துணைத்தலைவர் சி டி சி சத்தியமூர்த்தி, உடுமலை இப்ராஹீம் அலி, மடத்துக்குளம் முன்னாள் ஒன்றிய அமைப்பாளர் தமிழரசன், கடத்தூர் புதூர் முகாம் துணைச் செயலாளர் பிரபு, மடத்துக்குளம் பிலவேந்தன் கணியூர் பேரூர் செயலாளர் ஜெயபிரகாஷ், பொருளாளர் தங்கவேல் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

அதேநேரம், மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில், கண்ணாடிப்புத்தூர், பெரிய வட்டாரம், கழுகரை உள்ளிட்ட பல பகுதிகளில் கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சியின் கொடியினை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் ஏற்றி வைத்தார். இந்நிகழ்விலும் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...