மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றங்கரையில் இளம்பெண் கொடூரமாக கொலை: போலீஸ் தீவிர விசாரணை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றங்கரையில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கை, கால், வாய் கட்டப்பட்டு நிர்வாணமாக கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றங்கரையில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து கிடைத்த தகவலின் பேரில் மடத்துக்குளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் கை, கால், வாய் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக ரத்த வெள்ளத்தில் கிடந்தது.



உடனடியாக பிணத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொல்லப்பட்ட பெண் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை காணும் வகையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தகவல்கள் கிடைக்கப்பெற்றவுடன் தெரிவிக்கப்படும்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...