கோவை வடக்கு மாவட்டம் துடியலூர் பகுதி திமுக உறுப்பினர்கள் கூட்டம்: மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி பங்கேற்பு

கோவை துடியலூர் அருகே வடமதுரையில் திமுக கோவை வடக்கு மாவட்டம் துடியலூர் பகுதி கழகம் சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார்.



கோவை: கோவை துடியலூர் அருகே வடமதுரையில் உள்ள எஸ்.எஸ்.கமலேஷ் திருமண மண்டபத்தில் திமுக கோவை வடக்கு மாவட்டம் துடியலூர் பகுதி கழகம் சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்திற்கு பகுதி செயலாளர் அருள்குமார் தலைமை வகித்தார். 2வது வட்ட கழக செயலாளர் சண்முகம் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. நாகராஜன், சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் மணிசுந்தர், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகர், விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட அமைப்பாளர் தியாகு, ஆதிதிராவிர அணி மாவட்ட அமைப்பாளர் தென்னை சிவா, வட்ட கழக செயலாளர்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.



சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி பேசுகையில், "அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் உரிய பதில்கள் தலைமையிடமிருந்து கண்டிப்பாக கிடைக்கும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 என்று வெற்றி பெற்றது போல, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளையும் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.



இக்கூட்டத்தில் பகுதி அவைத்தலைவர், துணை செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், பல்வேறு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், பாக முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, மாவட்ட பிரதிநிதி தன்ராஜ் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...