உடுமலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா: 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 6-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு நடனமாடி, பாடல்கள் பாடி மகிழ்ந்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 6-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.



தளி ரோட்டில் உள்ள தேஜஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில், 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கலந்து கொண்டனர்.



குழந்தைகள் கிருஷ்ணர் பாடல்களுக்கு நடனமாடியதோடு, பக்தி பாடல்களையும் பாடி அனைவரையும் கவர்ந்தனர்.



விழாவின் முக்கிய நிகழ்வாக உரியடித்தல் போட்டி நடைபெற்றது. இதில் கிருஷ்ணர், ராதை வேடமிட்ட குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்று உரியடித்தனர்.

இந்த விழாவில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக பொது செயலாளர் வடுகநாதன், இளைஞர் அணி பாலகுரு, இந்து சாம்ராஜ்யம் நிறுவனத் தலைவர் சக்திவேல், விஸ்வ ஹிந்து பரிஷத் உடுமலை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குழந்தைகளின் கலகலப்பான பங்கேற்பால் விழா கோலாகலமாக நடைபெற்றது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...