ஆனைகட்டி அருகே மண் சகதியில் சிக்கி பெண் காட்டு யானை பலி


கோவை மாவட்டம், ஆனைகட்டி அருகே அமைந்துள்ளது செம்பிக்கரை கிராமம். அடர்ந்த வனப்பகுதியின் அருகே அமைந்துள்ள இக்கிராமத்தில் நீர் மற்றும் உணவுக்காக காட்டு யானைகள் அவ்வப்போது வருவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று சுமார் 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக செம்பிக்கரையில் உள்ள நீர் குட்டைக்கு வந்துள்ளது. அப்போது குட்டையில் இருந்த நீர் வறண்டு மண் சகதியாக இருந்த நிலையில் யானை அதில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.



இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் ஜேசிபி வாகன உதவியுடன் யானையின் உடலை மீட்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, யானையின் உடல் அப்பகுதியிலேயே பிரேத பரிசோதனை செய்யப்படும் என மாவட்ட வன அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆனைகட்டி பகுதியிலேயே தண்ணீர் தேடி வந்த யானை உயிரிழந்தது. தொடர்ந்து, கோவை மாவட்டத்திலும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் உள்ள வனப்பகுதிகளில் தொடர்ந்து யானைகள் உயிரிழந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...