கோவை ஆர்.எஸ்.புரத்தில் பாஜக இளைஞர் அணி செயலாளர் சதீஷ்குமார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கொலை முயற்சி தாக்குதல் நடத்தினர். காயமடைந்த சதீஷ்குமார் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Coimbatore: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல இளைஞர் அணி செயலாளர் சதீஷ்குமார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கொலை முயற்சி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் கடுமையாக காயமடைந்த சதீஷ்குமார் உடனடியாக தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (கங்கா) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடன் ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபர்களை கண்டறியும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கொடூரமான தாக்குதலை கண்டித்து கோவை மாவட்ட தெற்கு பாஜக தலைவர் வசந்த ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தை எதிர்த்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் பாஜக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடன் ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபர்களை கண்டறியும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கொடூரமான தாக்குதலை கண்டித்து கோவை மாவட்ட தெற்கு பாஜக தலைவர் வசந்த ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தை எதிர்த்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் பாஜக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.