உடுமலை அருகே ஆலம்பாளையம் குளத்திற்கு நீர் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆலம்பாளையத்தில் உள்ள பூசாரி நாயக்கன் குளத்திற்கு நீர் வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மூன்று ஆண்டுகளாக வறண்டுள்ள குளத்தால் சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆலம்பாளையத்தில் 76 ஏக்கர் பரப்பளவில் பூசாரி நாயக்கன் குளம் அமைந்துள்ளது. இந்த குளம் 10 அடி நீர்மட்டமும், 24.67 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டுள்ளது. சுற்றுப்புறத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் போர்வெல்களுக்கு நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் இந்த குளம் உள்ளது.

நேரடியாக 88.56 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் இந்த குளத்தின் மூலம் பாசன வசதி பெற்று வருகின்றன. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மானுப்பட்டி கிளை கால்வாயில் உள்ள 2.65 மடை வாயிலாக குளத்துக்கு நீர் வழங்கப்பட்டு வந்தது.



ஆனால், கடந்தாண்டு ஏற்பட்ட வறட்சி மற்றும் குளறுபடி காரணமாக குளத்துக்கு நீர் வழங்கப்படவில்லை. இதனால் மூன்று ஆண்டுகளாக குளம் வறண்டு காணப்படுவதோடு, சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டு, தென்னை உள்ளிட்ட நிலைப் பயிர்களும் காய்ந்து வருகின்றன.

தற்போது, பிஏபி திட்ட தொகுப்பு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. திருமூர்த்தி அணையின் தற்போதைய நீர்மட்டம் மொத்த 60 அடியில் 53.75 அடியாக உள்ளது. இந்நிலையில், பாரம்பரிய உரிமை அடிப்படையில் ஆலம்பாளையத்தில் உள்ள பூசாரி நாய்க்கன் குளத்துக்கு உடனடியாக தண்ணீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...