கோவை மேற்கு மண்டலத்தில் மேயர் திடீர் ஆய்வு - பள்ளி கட்டுமானம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை பார்வையிட்டார்

கோவை மேற்கு மண்டலத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி கட்டுமானம், மதிய உணவு தயாரிப்பு, பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று (28.08.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேற்கு மண்டலம் வார்டு எண் 35க்குட்பட்ட இடையர்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாநகராட்சி கல்வி நிதியிலிருந்து ரூ.75.00 இலட்சம் மதிப்பீட்டில் 6 கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



மேலும், அப்பள்ளியில் தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமான முறையில் தரமாக வழங்கப்படுகிறதா என்பதையும், உணவுப் பொருட்கள் இருப்புகள் மற்றும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண் 35க்குட்பட்ட புதிய நெசவாளர் காலனி, மூகாம்பிகை நகர் பகுதிகளில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் சேதமடைந்துள்ள மழைநீர் வடிகால்களை மேயர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வுகளின் போது உதவி ஆணையர் சந்தியா, மாமன்ற உறுப்பினர் சம்பத், மண்டல சுகாதார அலுவலர் வீரன், உதவி பொறியாளர் ராஜேஸ்வேணுகோபால், சுகாதார ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...