கோவை மேற்கு மண்டலத்தில் மேயர் திடீர் ஆய்வு - பள்ளி கட்டுமானம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை பார்வையிட்டார்

கோவை மேற்கு மண்டலத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி கட்டுமானம், மதிய உணவு தயாரிப்பு, பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று (28.08.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேற்கு மண்டலம் வார்டு எண் 35க்குட்பட்ட இடையர்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாநகராட்சி கல்வி நிதியிலிருந்து ரூ.75.00 இலட்சம் மதிப்பீட்டில் 6 கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



மேலும், அப்பள்ளியில் தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமான முறையில் தரமாக வழங்கப்படுகிறதா என்பதையும், உணவுப் பொருட்கள் இருப்புகள் மற்றும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண் 35க்குட்பட்ட புதிய நெசவாளர் காலனி, மூகாம்பிகை நகர் பகுதிகளில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் சேதமடைந்துள்ள மழைநீர் வடிகால்களை மேயர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வுகளின் போது உதவி ஆணையர் சந்தியா, மாமன்ற உறுப்பினர் சம்பத், மண்டல சுகாதார அலுவலர் வீரன், உதவி பொறியாளர் ராஜேஸ்வேணுகோபால், சுகாதார ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...