தமிழகம் முழுவதும், தற்போது பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிவுபெற்று கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது விடுமுறை நாட்களைக் கழிப்பதற்காக குழந்தைகளுடன் பெற்றோர்களும், தங்களது சொந்த ஊர், உறவினர் வீடு மற்றும் சுற்றுலா என பயணித்து வருகின்றனர்.
இவ்வாறு பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதால் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அதிகப்படியாக கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்நிலையில், தற்போது கோடை கால சிறப்பு ரயில் சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. இவை பேருந்து கட்டணத்தை விட குறைவு என்பதாலும், நேரம் குறைவான பாதுகாப்பான பயணம் என்பதாலும் பெரும்பாலான மக்கள் ரயில் சேவையினையே அதிகம் விரும்புகின்றனர்.

இதனிடையே, பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள கூட்ட நெரிசலைப் பயண்படுத்தி திருட்டு உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களும் நடைபெறும் என்பதால் அதிகப்படியான காவல்துறையினர் அப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.