பொள்ளாச்சி அருகே இலங்கை தமிழர் குடியிருப்புகள் இடியும் நிலை: சார் ஆட்சியரிடம் முறையீடு

பொள்ளாச்சி அருகே கோட்டூர் மற்றும் ஆழியாறு அணை பகுதியில் 30 ஆண்டுகளாக வசிக்கும் இலங்கை தமிழர்கள், சிதிலமடைந்த குடியிருப்புகளால் பாதுகாப்பின்றி வாழ்வதாக சார் ஆட்சியரிடம் முறையீடு செய்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மற்றும் ஆழியாறு அணை பகுதியில் பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரியத் துறைக்குச் சொந்தமான குடியிருப்புகளில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 30 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

இந்தக் குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்தும், சிதிலமடைந்தும், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் முதியோர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் உயிருக்கு அச்சம் கொண்டு வாழ்ந்து வருவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், நடவடிக்கை எடுக்கக் கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்கள் குடும்பத்தினருடன் மனு அளித்தனர். சுமார் 30 ஆண்டுகளாக மறுவாழ்வு முகாமில் வசிக்கும் தங்களுக்கு அரசு எவ்விதமான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டனர்.

குடியிருப்புகள் அனைத்தும் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாகவும், அவற்றை சீரமைத்துத் தரக் கோரி பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் முறையிட்டனர். இந்த நிலையில், மாற்று குடியிருப்புகளை கட்டித் தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...