கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து இன்று அய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் ஹரஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாடு மோட்டார் வாகன முறைப்படுத்துதல் சிறப்பு விதிகள் 2012-ன் கீழ் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களின் தரம் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்ளையும் தர ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்யும் வகையில் இன்று கோவை மையம், கோவை தெற்கு மற்றும் சூலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 441 பள்ளி வாகனங்களுக்கு தர ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன.

இப்பணிகளை மேற்கொள்ள மாநகர காவல்துறை, போக்குவரத்துத்துறை, கல்வித்துறை ஆகிய துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஆய்வில் ஒவ்வொரு வாகனத்திலும் வாகனத்தின் தினசரி குறிப்பு புத்தகம், முதலுதவி பெட்டி, தீயணைப்புக்கருவி, இருக்கை வசதிகள், அவசரக்கால வழி, வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஓட்டுநர் கண்பார்வை மற்றும் உடல்தகுதி, உதவியாளர் நிலை உள்ளிட்டவை சோதனைக்கு உட்படுத்தப்படும்.

கோவை மாவட்டத்திலுள்ள 4 வட்டார பகுதிகளில் இன்று (ஏப்ரல் 27) 441 பள்ளி வாகனங்களும், நாளை (ஏப்ரல் 28) 411 பள்ளி வாகனங்களும், என மொத்தம் 852 பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது" என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாடு மோட்டார் வாகன முறைப்படுத்துதல் சிறப்பு விதிகள் 2012-ன் கீழ் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களின் தரம் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்ளையும் தர ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்யும் வகையில் இன்று கோவை மையம், கோவை தெற்கு மற்றும் சூலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 441 பள்ளி வாகனங்களுக்கு தர ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன.

இப்பணிகளை மேற்கொள்ள மாநகர காவல்துறை, போக்குவரத்துத்துறை, கல்வித்துறை ஆகிய துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஆய்வில் ஒவ்வொரு வாகனத்திலும் வாகனத்தின் தினசரி குறிப்பு புத்தகம், முதலுதவி பெட்டி, தீயணைப்புக்கருவி, இருக்கை வசதிகள், அவசரக்கால வழி, வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஓட்டுநர் கண்பார்வை மற்றும் உடல்தகுதி, உதவியாளர் நிலை உள்ளிட்டவை சோதனைக்கு உட்படுத்தப்படும்.

கோவை மாவட்டத்திலுள்ள 4 வட்டார பகுதிகளில் இன்று (ஏப்ரல் 27) 441 பள்ளி வாகனங்களும், நாளை (ஏப்ரல் 28) 411 பள்ளி வாகனங்களும், என மொத்தம் 852 பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது" என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.