கோவையில் பிரியாணி சாப்பிடும் போட்டி: பரிசுக்காக குவிந்த உணவு பிரியர்கள்

கோவையில் போச்சே புட் எக்ஸ்பிரஸ் உணவகத்தில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டியில் நூற்றுக்கணக்கான உணவு பிரியர்கள் பங்கேற்றனர். ரூ.1 லட்சம் வரை பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.



Coimbatore: கோவை ரயில் நிலையம் அருகே உள்ள போச்சே புட் எக்ஸ்பிரஸ் உணவகத்தில் பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொள்ள நூற்றுக்கணக்கான உணவு பிரியர்கள் குவிந்தனர்.

போட்டியில் 3 பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.25,000, 4 பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.50,000, 6 பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பால் கவரப்பட்ட உணவு பிரியர்கள், எதிர்பார்த்ததை விட ஐந்து மடங்கு அதிகமாக வந்து குவிந்தனர்.



போட்டியாளர்கள் டோக்கன்கள் மூலம் குழுக்களாக பிரிக்கப்பட்டு, சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டிகள் நடத்தப்பட்டன. அரை மணி நேரத்தில் வரையறுக்கப்பட்ட அளவு பிரியாணிகளை சாப்பிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



சிக்கன் பிரியாணி பெரிய பாத்திரத்தில் வைக்கப்பட்டதால், அளவு அதிகமாக இருந்தது. இதனால் பலரும் திணறி திணறி சாப்பிட்டனர். சிலர் சாப்பிட முடியாமல் இடையிலேயே விலகினர்.

போட்டியில் பங்கேற்றவர்களில் கணேச மூர்த்தி என்பவர் தனது ஆட்டிசம் பாதிக்கப்பட்ட மகனுக்காக நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பங்கேற்றதாக தெரிவித்தார். இது பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



கோவையில் இருந்து மட்டுமல்லாமல், கேரளாவிலிருந்தும் பலர் இந்த போட்டியில் பங்கேற்க வந்திருந்தனர். உணவு பிரியர்களின் மகிழ்ச்சிக்காகவும், உதவி தேவைப்படுவோருக்கு உதவும் நோக்கிலும் இது போன்ற போட்டிகளை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...