பொள்ளாச்சியில் அதிக பாரம் ஏற்றிய 10 லாரிகள் பறிமுதல்: ரூ.8 லட்சம் அபராதம் விதிப்பு

பொள்ளாச்சி பகுதியில் கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றிச் சென்ற 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



Coimbatore: பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதில், சில லாரிகள் சட்டவிரோதமாக அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக கற்களை ஏற்றிச் செல்வது வழக்கமாக உள்ளது.

கோபாலபுரம் மற்றும் வளந்தாயமரம் சோதனை சாவடிகள் வழியாகவும், மாற்றுப் பாதைகள் வழியாகவும் கேரளாவுக்கு அதிக அளவு கற்கள் கொண்டு செல்லப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இணை போக்குவரத்து ஆணையர் சிவக்குமரன் உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று இரவு சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டனர்.



இந்த சோதனையின் போது, இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், அரசு நிர்ணயித்த அளவுக்கு அதிகமாக 20 டன் கற்கள் ஏற்றிச் செல்லப்பட்ட 10 லாரிகள் கண்டறியப்பட்டன. இந்த லாரிகள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு, பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட 10 லாரிகளுக்கு மொத்தம் ரூ.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தொடர்ந்து சோதனைச் சாவடிகளிலும், மாற்று வழிகளிலும் வாகனங்கள் செல்கின்றதா என்பதை கண்காணிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...