உடுமலை அருகே நான்கு வழிச்சாலை பகுதியில் பொள்ளாச்சி எம்பி ஆய்வு: பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

உடுமலை அருகே நான்கு வழிச்சாலை பகுதியில் பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி ஆய்வு மேற்கொண்டார். பாலப்பம்பட்டி பஞ்சாபி தாபா சந்திப்பில் பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விபத்துகள் குறித்து புகார் அளித்தனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வேடப்பட்டி நரசிங்கபுரம், பாறைமேடு, மைவாடி, போளரப்பட்டி ஆகிய தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள குறைகளை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர், பாலப்பம்பட்டி பஞ்சாபி தாபா சந்திப்பில் ஆய்வின் போது 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எம்பியை சந்தித்தனர். இந்த பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்ந்து நிகழ்வதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.



இதனால் எம்பி முன்னிலையில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இப்பகுதியில் தற்காலிகமாக ரவுண்டானா அமைக்கப்படும் என பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

இந்த ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் நாகராஜன், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...