கோவை மாநகராட்சி ஆணையர் தெற்கு மண்டலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS தெற்கு மண்டலத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை 29.08.2024 அன்று நேரில் ஆய்வு செய்தார். அங்கன்வாடி மையங்கள், சுகாதார மையங்கள், பாலம் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள், இன்று (29.08.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது, தெற்கு மண்டலம் வார்டு எண்.78க்குட்பட்ட செல்வபுரம் வடக்கு 10வது வீதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.5.90 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் அங்கன்வாடி மைய கட்டுமானப்பணியினையும்,





வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் அங்கன்வாடி மைய கட்டுமானப்பணியினையும் ஆணையர் பார்வையிட்டார்.



வார்டு எண். 79க்குட்பட்ட எஸ்.ஏ.கார்டன் பகுதியில் கட்டப்பட்டுவரும் நகர்ப்புற சுகாதார துணை மையத்தினையும்,





பேரூர் தெலுங்குபாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றின் கரைகளின் இருபுறங்களிலும் அளவீடு செய்து எல்லை கற்கள் நடும் பணியினையும் ஆணையர் ஆய்வு செய்தார்.



வார்டு எண்.89க்குட்பட்ட சுண்டக்காமுத்தூர் NDP வீதியில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் வீடற்றோர் தங்கும் விடுதி கட்டுமானப்பணியினையும்,



இராமசெட்டிபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் மாநில நிதி ஆணைய திட்டத்தின்கீழ் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் வகுப்பறை கட்டுமானப்பணியினையும் ஆணையர் பார்வையிட்டார்.



வார்டு எண்.92க்குட்பட்ட சுகுணாபுரம் கிழக்கு பிரதான சாலையில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.92.00 இலட்சம் மதிப்பீட்டில் பாலமுருகன் கோவில் சந்திப்பு முதல் எஸ்.எஸ்.கார்டன்ஸ் வரை தடுப்பு சுவர் கட்டும் பணியினையும் ஆணையர் ஆய்வு செய்தார்.





வார்டு எண்.93க்குட்பட்ட ராம்நகர், இடையர்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் கட்டிடங்களையும்,



வார்டு எண்.88க்குட்பட்ட தொண்டாமுத்தூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் கட்டிடங்களையும் ஆணையர் பார்வையிட்டார்.



வார்டு எண்.98க்குட்பட்ட பொள்ளாச்சி மெயின் ரோடு, காந்திநகர் பகுதியில் பொதுநிதியிலிருந்து ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் யோகா மையம் கட்டுமானப்பணியினையும் மற்றும் வார்டு எண்.99க்குட்பட்ட வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ABC மையத்தினையும் ஆணையர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கட்டுமானப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி, வசந்தாமணி, முருகேசன், பாபு, இளஞ்சேகரன், செந்தில்குமார், உதயகுமார், அஸ்லாம்பாஷா, உதவி நகர திட்டமிடுநர் விஜயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர் சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தார்கள்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...