கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அறம் அறக்கட்டளை சார்பில் வடவள்ளியில் செயல்பட்டு வரும் சின்மையா பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான தற்காப்புப் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் அப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 110 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இப்பயிற்சியினை விவேக் மற்றும் கார்த்திக் ஆகியோர் வழங்கினர். மேலும், இதில் தற்காப்புப் பயிற்சிகள் மட்டுமின்றி குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை கண்டறிவது குறித்தும் கற்றுத்தரப்பட்டது.

குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு, கடத்தல், கொலை உள்ளிட்ட தற்போதைய சமூகச் சூழலில் பெருகி வரும் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இப்பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மேலும், தேர்வில் தோல்வி கண்டு தற்கொலை, மன அழுத்தம் உள்ளிட்டவைகளில் இருந்து மாணவர்கள் எவ்வாறு விடுபட்டு தன்னம்பிக்கையுடன் வெற்றிபெற வேண்டும் என்பன குறித்தும் மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இதில் அப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 110 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இப்பயிற்சியினை விவேக் மற்றும் கார்த்திக் ஆகியோர் வழங்கினர். மேலும், இதில் தற்காப்புப் பயிற்சிகள் மட்டுமின்றி குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை கண்டறிவது குறித்தும் கற்றுத்தரப்பட்டது.

குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு, கடத்தல், கொலை உள்ளிட்ட தற்போதைய சமூகச் சூழலில் பெருகி வரும் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இப்பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மேலும், தேர்வில் தோல்வி கண்டு தற்கொலை, மன அழுத்தம் உள்ளிட்டவைகளில் இருந்து மாணவர்கள் எவ்வாறு விடுபட்டு தன்னம்பிக்கையுடன் வெற்றிபெற வேண்டும் என்பன குறித்தும் மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.