வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் மழையில் தர்ணா: நகர மன்ற துணைத் தலைவர் உள்ளிட்ட 16 பேர் போராட்டம்

வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் கொட்டும் மழையில் நகர மன்ற துணைத் தலைவர் தா.மா செந்தில்குமார் உள்ளிட்ட 16 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வளர்ச்சிப் பணிகளை தடுக்கும் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலையீடு குறித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.



Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று நடைபெற்ற சாதாரண நகர மன்ற கூட்டத்திற்கு முன்னதாக, நகர மன்ற துணைத் தலைவர் தா.மா செந்தில்குமார் உள்ளிட்ட 16 பேர் கொட்டும் மழையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வால்பாறை நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் திமுக கட்சி உறுப்பினர்கள் 19 பேர், அதிமுக உறுப்பினர் ஒருவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் ஒருவர் ஆகியோர் உள்ளனர். இன்றைய கூட்டம் துவங்கும் முன்பு நகர மன்ற துணைத் தலைவர் தா.மா செந்தில்குமார் நகராட்சி அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் மற்ற நகர மன்ற உறுப்பினர்கள் 15 பேரும் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.



போராட்டக்காரர்கள் கூறியதாவது: "வால்பாறையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சிப் பணிகளை செய்யவிடாமல் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலையீடு தடுக்கிறது. மாதந்தோறும் நடைபெறும் நகர மன்ற கூட்டத்தில் அனைத்து வேலைகளையும் தீர்மானம் செய்து பணிகளை ஏலம் விடும்போது, அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இடையூறு செய்து பணிகளை ஏலம் விடுவதை ஐந்து முறை நிறுத்தி உள்ளனர்."

"இதனால் பொதுமக்களுக்கு செய்யவேண்டிய வளர்ச்சிப் பணிகளை செய்ய முடியாமல் உள்ளது. பொதுமக்கள் வார்டு உறுப்பினர்களிடம் கேள்வி கேட்டு வருகின்றனர். திமுக தலைவர் முதல்வர் வார்டு உறுப்பினர்களை சுதந்திரமாக மக்களுக்கு பணிகளை செய்ய கூறியுள்ள நிலையில், இந்த மாதிரி வளர்ச்சிப் பணிகளை செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர்" என்று குற்றம்சாட்டினர்.

இந்தப் பிரச்சினையைக் கண்டித்து நகர மன்ற துணைத் தலைவர் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், நகராட்சி அலுவலகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...