பொள்ளாச்சி அருகே குடும்பப் பிரச்சினையால் இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

பொள்ளாச்சி அருகே ஆனைமலை தாத்தூரில், குடும்பப் பிரச்சினையால் 30 வயது தாய் தனது 7 மற்றும் 4 வயது குழந்தைகளை கிணற்றில் வீசி, பின்னர் தானும் குதித்து தற்கொலை செய்துகொண்டார். போலீசார் மூவரின் உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தாத்தூர் பகுதியில் குடும்பப் பிரச்சினை காரணமாக தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் நடந்துள்ளது.

ஆனைமலை தாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்.



இவரது மனைவி சுகன்யா (30). இவர்களுக்கு தனுஸ்ரீ (7) மற்றும் அகிலன் (4) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அருண்குமார் மற்றும் சுகன்யா இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமாக சுகன்யா தனது இரண்டு குழந்தைகளையும் அருகே உள்ள கிணற்றில் வீசி, பின்னர் தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் ஆனைமலை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.



உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் இரண்டு குழந்தைகள் மற்றும் சுகன்யா ஆகிய மூவரின் உடல்களும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டன. பிரேத பரிசோதனைக்காக உடல்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து ஆனைமலை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பப் பிரச்சினை காரணமாக இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும், உறவினர்களிடையேயும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...