கோவை அசோகபுரத்தில் புதிய நியாய விலைக் கடை திறப்பு: எம்.பி. கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார்

கோவை அசோகபுரம் ரங்கம்மாள் காலனியில் புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா நடைபெற்றது. எம்.பி. கணபதி ராஜ்குமார் கடையை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் ஊராட்சிக்குட்பட்ட ரங்கம்மாள் காலனி ஓம்சக்தி கோவில் வீதியில் புதிய நியாய விலைக் கடை திறக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை கோயம்புத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் இந்த கடை தொடங்கப்பட்டுள்ளது.



கோயமுத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் இந்த கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



அவர் பூஜைகள் செய்து கடையை தொடங்கி வைத்த பின்னர், ரேஷன் அட்டைதாரர்களுக்கு சர்க்கரை, பருப்பு, அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கி முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் கார்த்திக், ஊராட்சித் துணைத் தலைவர் ஆடிட்டர் சண்முகசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தாராம், கூட்டுறவுத்துறை சார்பதிவாளர் நவீன், திமுக கட்சி நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி செந்தில்ராஜா, ஒன்றிய துணை செயலாளர் அசோக், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் விஜயன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இதே நாளில், ஆசிரியர் காலனி அரசு பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் முகாமும் தொடங்கப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த முகாமை மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் தொடங்கி வைத்தார். இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தாராம் மற்றும் மாவட்ட பிரதிநிதி செந்தில்ராஜா ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...