தீக்கதிர் நாளிதழ் சார்பில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி கோவையில் ஏப்ரல் 28ம் தேதியன்று (இன்று) நடைபெறுகிறது. இதில் கல்வியாளர்கள், தொழில்துறை நிபுனர்கள், வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களுக்கு மேற்படிப்பு குறித்து வழிகாட்டுகின்றனர்.
12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் உயர்க் கல்வி படிப்பதற்கு எதை படிப்பது ?, என்ன படிப்பது ? என்றும், கல்விக்கடனை வங்கியில் எப்படி பெருவது என்பது குறித்து சக மாணவர்களோடும், பெற்றோர்களோடும் கலந்துரையாடி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை உணர்ந்து தீக்கதிர் நாளிதழ் சார்பில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி வடகோவையில் உள்ள குஜராத் சமாஜ் அரங்கத்தில் நடைபெறுகிறது.
இதில், முன்னாள் கல்வி அமைச்சரும், மாபாய் பயிற்சி மையத்தின் நிறுவனருமான க.பாண்டியராஜன், கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், கல்வியாளர் டி.நெடுஞ்சழியன், கனரா வங்கியின் முதுநிலை மேலாளர் ஜே.வணங்காமுடி, அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் கணேஷ் ஆகியோர் பங்கேற்று உயர்கல்வியும், வேலை வாய்ப்பும், வரவேற்க காத்திருக்கும் எதிர்காலம், அனைவரும் பெறலாம் கல்விக்கடன், போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி உள்ளிட்ட தலைப்புகளில் மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றனர்.
மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு அனுமதி இலவசமாய் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் உயர்க் கல்வி படிப்பதற்கு எதை படிப்பது ?, என்ன படிப்பது ? என்றும், கல்விக்கடனை வங்கியில் எப்படி பெருவது என்பது குறித்து சக மாணவர்களோடும், பெற்றோர்களோடும் கலந்துரையாடி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை உணர்ந்து தீக்கதிர் நாளிதழ் சார்பில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி வடகோவையில் உள்ள குஜராத் சமாஜ் அரங்கத்தில் நடைபெறுகிறது.
இதில், முன்னாள் கல்வி அமைச்சரும், மாபாய் பயிற்சி மையத்தின் நிறுவனருமான க.பாண்டியராஜன், கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், கல்வியாளர் டி.நெடுஞ்சழியன், கனரா வங்கியின் முதுநிலை மேலாளர் ஜே.வணங்காமுடி, அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் கணேஷ் ஆகியோர் பங்கேற்று உயர்கல்வியும், வேலை வாய்ப்பும், வரவேற்க காத்திருக்கும் எதிர்காலம், அனைவரும் பெறலாம் கல்விக்கடன், போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி உள்ளிட்ட தலைப்புகளில் மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றனர்.
மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு அனுமதி இலவசமாய் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.