கோவையில் செவிலியரை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை


கோவையில் செவிலியரை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஒத்தகால்மண்டபம் மாசிகவுடன்பதி பகுதியைச் சேர்ந்தவர் பிராகாஷ் (28). இவரது மனைவி சத்யபாமா. பிரகாஷ் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

இதனிடையே, அதேப் பகுதியைச் சேர்ந்த செவிலியரான ஜகதாம்பாள் என்பவருடன் பிரகாஷ்-க்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, தன்னை திருமணம் செய்துகொள்ளும் படி பிரகாஷை ஜகதாம்பாள் வற்புறுத்தியதைத் தொடர்ந்து கடந்த 2013-ஆம் ஆண்டு ஜகதாம்பாளை பிராகாஷ் தனது நண்பர் ரூபேஷ் என்பவருடன் இணைந்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு டவுன் காவல்துறையினர் பிரகாஷ், அவரது மனைவி சத்யபாமா, பிராகாஷின் நண்பர் ரூபேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து, இன்று கோவை மகிளா நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் வழக்கில் சேர்க்கப்பட்ட பிராகாஷின் மனைவி சத்யபாமா மற்றும் நண்பர் ரூபேஷ் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். பிராகாஷுக்கு ஆயுள் தண்டனையும்,  5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...