மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்துள்ள நிலையில் தற்போது புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், பதுக்கி வைத்த பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றித்தர தரகர்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கோவையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் சிக்கியுள்ளது.
இதில் பெங்களூரைச் சேர்ந்த இளங்கோவன் (62) மற்றும் மும்பையை சேர்ந்த் திவாகர் (48) என்ற இருவர் கோவை சாயிபாபா காலனி பகுதியில் சிக்கியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது இவர்கள் இருவரிடமும் சாய்பாபா காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.