இலங்கையில் ஈழத்தமிழர்கள் படுகொலை பற்றிய போர்க்குற்ற விசாரணை மன்றம் அமைக்க வேண்டும். தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்ற ஐ.நா மன்றம், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினர்களுக்கு பரிந்துரைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் கூட்டத்தின் இரண்டாவது அமர்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐ.நா மன்றம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சமூக பொருளாதாரக் குழுவின் 1996/ 31 தீர்மானத்தை ஒட்டிய, வைகோ அவர்களின் கோரிக்கை விண்ணப்பம் குழு உறுப்பினர்களின் ஆய்வுக்காக சுற்றுக்கு விடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.