மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை முட்டி வீசிய மாடு: வைரலாகும் காணொளி

மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை மாடு முட்டி வீசியது. இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Coimbatore: மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதி சாலைகளில் கால்நடைகள் சுதந்திரமாக உலவி வருவதால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலை சங்கர் நகரில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மாடு முட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) நடந்த இந்த சம்பவத்தில், வாகனத்தில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தின் காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனினும், சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவது குறைந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் பலரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...