கோவை வார்டு 2-ல் நடைபாதை மற்றும் சிறுவர் பூங்கா திறப்பு: எம்பி கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார்

கோவை வார்டு 2-ல் ரூ.14.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நடைபாதை மற்றும் சிறுவர் பூங்காவை எம்பி கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார். மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில் நிகழ்வு நடைபெற்றது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 2-க்குட்பட்ட வெள்ளக்கிணறு பிரிவு, குமாரசாமி அவென்யூ பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.14.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதை மற்றும் சிறுவர் பூங்காவினை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். திறப்பு விழாவின் போது எம்பி கணபதி ராஜ்குமார் மரக்கன்று நட்டு வைத்தார்.



நிகழ்ச்சியில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், முன்னாள் தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் ரவி, வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மாமன்ற உறுப்பினர்களான கற்பகம், புஷ்பமணி, சித்ரா தங்கவேல், சாந்தாமணி ஆகியோரும் பங்கேற்றனர்.



மாநகராட்சி அதிகாரிகளான உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், உதவி பொறியாளர் ஜெயின்ராஜ் உள்ளிட்டோரும் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். இந்த புதிய நடைபாதை மற்றும் சிறுவர் பூங்கா அப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...