நீலகிரி மாவட்டம், உதகை பைகாரா அருவி நீர்வீழ்ச்சி சுற்றுலா தளங்களில் மிகவும் பிரசிதிபெற்றதாகும். இயற்கை எழில்கொஞ்சும் இதன் அழகை காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருவர்.
இதனிடையே, தமிழகம் முழுவதும் கடந்த அண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும், சரிவர பருவ மழை பெய்யாததன் காரணமாக பசுமை நிலங்கள் வறண்டு காணப்படுகிறது.

இந்நிலையில், தற்போது வெப்பசலனத்தின் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், வெயிலின் தாக்கத்தில் இருந்து மலைப் பகுதிகளில் சற்று குளுமையான சீதோஷனம் நிலவிவருகிறது.
உதகையில் கடந்த சில மாதங்களாக மழையின்றி அங்கமைந்துள்ள பைகாரா நீர்வீழ்ச்சியில் நிர்வரத்து இல்லாமல் முற்றிலும் வறண்டு காணப்பட்டது. இதனால் கடந்த இரு மாதமாக பைகாரா நீர்வீழ்ச்சியில் செய்யப்பட்டு வந்த மின்உற்பத்தியும் தடைபட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது பைகாரா நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து சில தினங்களாகப் பெய்த மழையின் காரணமாக, பைகாரா நீர்வீழ்ச்சியில் நீர் திரண்டு ஓடிவருகிறது. வெயில் வாட்டி வரும் வேளையில் இந்த குளுகுளு காட்சியினைக் காண சுற்றுலா பயணிகளின் குவிந்து வருகின்றனர்.