மனதை மயக்கும் உதகை பைகாரா நீர்வீழ்ச்சியில் குவியும் சுற்றுலா பயணிகள்


நீலகிரி மாவட்டம், உதகை பைகாரா அருவி நீர்வீழ்ச்சி சுற்றுலா தளங்களில் மிகவும் பிரசிதிபெற்றதாகும். இயற்கை எழில்கொஞ்சும் இதன் அழகை காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருவர். 

இதனிடையே, தமிழகம் முழுவதும் கடந்த அண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும், சரிவர பருவ மழை பெய்யாததன் காரணமாக பசுமை நிலங்கள் வறண்டு காணப்படுகிறது.



இந்நிலையில், தற்போது வெப்பசலனத்தின் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், வெயிலின் தாக்கத்தில் இருந்து மலைப் பகுதிகளில் சற்று குளுமையான சீதோஷனம் நிலவிவருகிறது.

உதகையில் கடந்த சில மாதங்களாக மழையின்றி அங்கமைந்துள்ள பைகாரா நீர்வீழ்ச்சியில் நிர்வரத்து இல்லாமல் முற்றிலும் வறண்டு காணப்பட்டது. இதனால் கடந்த இரு மாதமாக பைகாரா நீர்வீழ்ச்சியில் செய்யப்பட்டு வந்த மின்உற்பத்தியும் தடைபட்டிருந்தது. 



இந்நிலையில், தற்போது பைகாரா நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து சில தினங்களாகப் பெய்த மழையின் காரணமாக, பைகாரா நீர்வீழ்ச்சியில் நீர் திரண்டு ஓடிவருகிறது. வெயில் வாட்டி வரும் வேளையில் இந்த குளுகுளு காட்சியினைக் காண சுற்றுலா பயணிகளின் குவிந்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...