அன்னூர் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்: பதிவு பணிகள் பாதிப்பு

கோவை மாவட்டம் அன்னூரில் தொழில் பேட்டை அமைக்க நில கையகப்படுத்தல் எதிர்ப்பில் விவசாயிகள் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன.

கோவை மாவட்டம் அன்னூர் தாலுகாவில் நான்கு ஊராட்சிகளும், மேட்டுப்பாளையம் தாலுகாவில் இரண்டு ஊராட்சிகளும் உள்பட மொத்தம் ஆறு ஊராட்சிகளில் 3,850 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை அமைப்பதாக 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் அறிவித்தது.

இந்த அறிவிப்பை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும், கடந்த வாரம் மூன்று நாட்கள் பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தை அடுத்து மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை பத்திரப்பதிவு துவங்கியது.



இந்நிலையில், சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அன்னூர் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று (செப்டம்பர் 2) விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 50 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...