விசைத்தறி தொழிலை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது- மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி


விசைத்தறி தொழிலை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என கோவையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

விசைத்தறி மற்றும் ஜவுளிதுறையினை மேம்படுத்துவது தொடர்பாக பாராளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டம் கோவையில் இன்று நடைபெற்றது. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்ருமிதி இராணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய ஜவுளித்துறை செயலர் கவிதா குப்தா, ஜவுளித்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தினைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறுகையில், மத்திய அரசின் ஒவ்வொரு திட்டமும் அடுத்த பட்ஜெட் கூட்டத்திற்கு முன்பு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் அறிவுரைக்கேற்ப விசைத்தறி மேம்பாட்டிற்காக கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "பவர் டெக்ஸ் இந்தியா" திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோலார் மின் திட்டம் மூலம் பொதுப்பிரிவினருக்கு 50 சதவிகிதம் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 75 முதல் 90 சதவிகிதம் வரையும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 

விசைத்தறியாளர்கள், மத்திய அரசின் மானியம் மற்றும் நலத்திட்டங்கள் உள்ளிட்ட தொழில் சார்ந்த உதவிகளை பெற பிரத்யேகமாக 1800 222 017 என்ற அலைப்பேசி தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி தொழிலுக்கு கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 162 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய ஜவுளித்துறைச் செயலர் கவிதா குப்தா பேட்டியளிக்கையில், 

சர்வதேச சந்தையில் இந்திய ஜவுளித்துறையினரின் பலத்தை நிரூபிக்கும் வகையில் வருகிற ஜூன் 13-ம் தேதியிலிருந்து ஜூலை 2-ம் தேதி வரை குஜராத்தில் மிகப்பெரிய ஜவுளிக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது. அதில் தனியாக அரங்கு அமைக்க திருப்பூர் தொழில்துறையினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து பரிசீலிக்கப்படும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பவர் டேக்ஸ் இந்தியா திட்டத்தின் கீழ் வரும் பருத்தி வங்கி திட்டத்தின் மூலம் 11 நபர்கள் குழுவாக இணைந்து பருத்தியை கொள்முதல் செய்வதற்கு சுமார் 2 கோடி ரூபாய் மத்திய அரசால் கடன் வழங்கப்படுகிறது. பருத்தி விலையால் பாதிக்கப்படும் விசைத்தறியாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். 

மேலும் கடந்தாண்டு ஜவுளித்துறையின் ஏற்றுமதி 40 பில்லியன் டாலர்ஸ். அதில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி சற்று அதிகரித்துள்ளது" என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...