கோவை பூலுவபட்டி பேரூர் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

பூலுவபட்டி பேரூர் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். செப்டம்பர் 15ஆம் தேதி முப்பெரும் விழா குறித்து விவாதிக்கப்பட்டது.


கோவை: பூலுவபட்டி பேரூர் கழக திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று (செப்டம்பர் 3) நடைபெற்றது. இக்கூட்டம் பேரூர் கழக செயலாளர் சின்ராஜ் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், வரும் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறவுள்ள முப்பெரும் விழாவை முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் கொடியேற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



மேலும், இக்கூட்டத்தில் தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்லப்பன் (எ) சாமிபையன், கோவை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...