பிரான்ஸ் சென்ற கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் - பாரா பேட்மிட்டன் வீராங்கனைகளுடன் ஈபிள் டவரில் புகைப்படம்

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் பிரான்ஸ் பாரிஸில் பாரா பேட்மிட்டன் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீராங்கனைகளுடன் ஈபிள் டவரில் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த தகவலை அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் பாரா பேட்மிட்டன் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீராங்கனைகளை சந்தித்துள்ளார்.



இது குறித்து வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நேற்று (செப்டம்பர் 2) பிரான்ஸ் பாரிஸ் நகரில் நடைபெற்ற பாரா பேட்மிட்டன் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்ற தமிழக பெண் வீராங்கனைகள் துளசி மதி முருகேசன், மனிஷா மற்றும் நித்யஸ்ரீ அவர்களுடன் பாரிஸ் ஈபிள் டவர் முன்பாக மகிழ்ச்சியுடன் நினைவு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவுடன் வானதி சீனிவாசன் ஈபிள் டவர் முன்பு வீராங்கனைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...