கோவையில் சிறப்பு குழந்தைகள் குறித்த கலந்துரையாடல்: பெற்றோர்களுக்கு RAAC அமைப்பு ஏற்பாடு

கோவையில் RAAC அமைப்பு சார்பில் சிறப்பு குழந்தைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. குழந்தைகள் நல ஆலோசகர் மோகனவாணி பங்கேற்று பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார். சிறப்பு குழந்தைகளுக்கான "நம்ம ஸ்பெஷல் பார்க்" குறித்த தகவலும் பகிரப்பட்டது.


கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள RAAC அலுவலகத்தில் இன்று (செப். 04) சிறப்பு குழந்தைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் குழந்தைகள் நல ஆலோசகர் மோகனவாணி கலந்துகொண்டு சிறப்பு குழந்தைகள் குறித்து பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார்.



இந்த கலந்துரையாடலில் சிறப்பு குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது, அவர்களது மனநிலையை எப்படி சமநிலையில் வைத்துக் கொள்வது போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது மனநிலையை சீராக வைத்துக் கொள்வது மற்றும் தயக்கமின்றி உற்சாகத்தோடு சமூகத்தில் அங்கம் வகிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.



RAAC அமைப்பு சார்பில் சிறப்பு குழந்தைகளுக்கான "நம்ம ஸ்பெஷல் பார்க்" என்ற பூங்கா கோவை காளப்பட்டி சாலையில் உள்ள நேத்ரா நகரில் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பூங்கா BOSCH நிறுவனத்தின் CSR நிதி மற்றும் கோவை மாநகராட்சியின் ஒத்துழைப்புடன் அமைக்கப்படுகிறது. சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டுத் தளங்கள், ஜிப் லைன், ஏரோபிளேன் மாதிரி, பட்டாம்பூச்சி மற்றும் மூலிகை தோட்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது.



அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும், இந்த பூங்காவிற்கு செல்ல கட்டணம் ஏதும் இல்லை என்றும் RAAC அமைப்பு தெரிவித்துள்ளது. கலந்துரையாடலின் போது இந்தப் பூங்கா குறித்தும் பெற்றோர்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்றது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், புதிய உற்சாகம் பெற்றதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர். இத்தகைய கலந்துரையாடல்கள் இனி வாரந்தோறும் புதன்கிழமை காலை 11.30 மணி முதல் நண்பகல் 01:00 மணி வரை நடைபெறும் என்றும், இந்த கலந்துரையாடலில் பங்கு பெற கட்டணம் ஏதுமில்லை என்றும் RAAC அமைப்பு அறிவித்துள்ளது.

Newsletter

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...