7 நாள் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை: திருச்சியிலிருந்து கோவைக்கு விரைந்த ஆம்புலன்ஸ்

திருச்சியில் பிறந்த 7 நாள் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக, காவல்துறை பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் 2.5 மணி நேரத்தில் கோவை வந்தடைந்தது. குழந்தையின் உயிரைக் காக்க மருத்துவர்கள் தயாராக உள்ளனர்.



Coimbatore: திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 7 நாட்களே ஆன குழந்தைக்கு பிறவியிலேயே இருதய குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த குழந்தைக்கு அவசர இருதய அறுவை சிகிச்சை தேவைப்பட்டதால், கோவை ராமகிருஷ்ணா தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் திருச்சியில் இருந்து கிளம்பிய ஆம்புலன்ஸ், காவல்துறையின் உதவியுடன் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வேகமாக கோவையை நோக்கி பயணித்தது. ஆம்புலன்ஸ் தடையின்றி செல்வதற்காக சாலை முழுவதும் கிரீன் காரிடார் ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இரண்டரை மணி நேரத்தில் குழந்தை பாதுகாப்பாக ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஸ்வின் கூறுகையில், "வேகத்தடை மற்றும் பள்ளமான இடங்களில் எச்சரிக்கையாக செல்லும்படி ஆம்புலன்சில் இருந்த மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர். போக்குவரத்து இடையூறு இல்லாமல் காவல்துறையினர் மிகவும் உதவிகரமாக இருந்தனர். உரிய நேரத்தில் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தை குணமடைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்," என்றார்.

மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், "குழந்தையை பரிசோதித்து பிரச்சனையை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்க இருக்கிறோம். பிறந்து ஏழே நாளான குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வது மிகவும் சவாலான காரியம். ஏற்கனவே, பிறந்து ஐந்தே நாளான குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து தற்போது அந்த குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது. சிறப்பான மருத்துவ நிபுணர் குழு இருப்பதால், விரைவாக குழந்தை வந்தடைந்ததால் சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும் என்று நம்புகிறோம்," என்று தெரிவித்தனர்.

Newsletter

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...