உடுமலையில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

உடுமலையில் நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நடமாடி, சிறு திருட்டுகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் அச்சம். சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.



Coimbatore: உடுமலையில் கடந்த சில மாதங்களாக நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடமாடி வருவதாகவும், சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அய்யலுமீனாட்சி நகர், எஸ்.எஸ். காலனி, எம்.எம். லே அவுட், வேலுச்சாமி நகர், சங்கர் நகர், திருக்குமரன் நகர், நெப்போலியன் நகர் போன்ற பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளதாக தெரிகிறது. முகமூடி அணிந்த இந்த மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நடமாடி வருவதாகவும், பொதுமக்கள் சத்தமிட்டால் தப்பி ஓடுவதாகவும் கூறப்படுகிறது.



காவல்துறையின் அறிவுறுத்தலின்படி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், முகமூடி அணிந்த இந்த நபர்கள் எவ்வித பயமுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நடமாடி வருகின்றனர். இதுவரை இந்த மர்ம நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உடுமலை பகுதியில் கூடுதல் காவல்துறையினரை நியமித்து ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றும், இந்த மர்ம நபர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து நடக்கும் இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...