உடுமலை சந்தையில் தக்காளி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

உடுமலை சந்தையில் தக்காளி விலை உயர்வு காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 14 கிலோ பெட்டி ரூ.230 முதல் ரூ.260 வரை விற்பனையாகிறது. விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி ஆண்டு முழுவதும் சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், பருவ மழை மற்றும் சீதோஷ்ண நிலை காரணமாக தக்காளி அறுவடையின் போது தக்காளி பழங்கள் பாதிக்கப்பட்டன.

மேலும், திண்டுக்கல், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், தாராபுரம் பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து அதிகமாக இருந்த காரணத்தால், கடந்த சில வாரங்களில் 14 கிலோ பெட்டி ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையானதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால், ஒரு சில இடங்களில் தக்காளி பழங்களை பறிக்காமல் மாடுகளை மேய விட்டும், மற்றும் சாலை ஓரங்களில் கொட்டியும் வந்தனர்.



இந்நிலையில், தற்போது இன்று தக்காளி வரத்து அதிகமானாலும், 14 கிலோ பெட்டி ரூ.230 முதல் ரூ.260 வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்சமயம் மற்ற மாவட்டங்களில் இருந்து தக்காளி வரத்து சீராக உள்ளதால், தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...