கோவை: சின்ன தடாகம் 4வது வார்டு பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று காலை 8 மணி முதல் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் சீரான குடிநீர் வழங்கக் கோரி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் சுமார் 3 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது; ஊராட்சி தலைவர் கார்த்தியிடம் பலமுறை இது குறித்து புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை எனவும் தண்ணீர் திறந்து விடும் ஊழியர் பொன்னம்மாள் தங்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசுவதாகவும் குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் போராட்ட நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது; ஊராட்சி தலைவர் கார்த்தியிடம் பலமுறை இது குறித்து புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை எனவும் தண்ணீர் திறந்து விடும் ஊழியர் பொன்னம்மாள் தங்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசுவதாகவும் குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் போராட்ட நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
