கோவை: மாணவியிடம் தகாத வார்த்தை பேசிய ஆசிரியர் கைது - ஆசிரியர் தினத்தில் போக்சோ வழக்கு பதிவு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவியிடம் தகாத வார்த்தை பேசிய ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆசிரியர் தினத்தன்று நடந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவியிடம் தகாத முறையில் பேசிய ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளியில் "நம்ம ஊரு நம்ம பள்ளி" என்ற திட்டத்தின் கீழ் அறிவியல் பிராக்டிகல் வகுப்பு எடுப்பதற்காக காரமடை அருகிலுள்ள கண்ணார்பாளையத்தைச் சேர்ந்த 39 வயதான அய்யாசாமி என்பவர் வந்திருந்தார். அவர் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் அவரிடம் எப்போது தங்கள் வகுப்பிற்கு பாடம் எடுக்க வருவார் என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அய்யாசாமி, "இரவு 11 மணிக்கு வருகிறேன், பாய் எடுத்து வை" என்று தகாத முறையில் பேசியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்த மாணவி, உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் இந்திராணி சோபியா தலைமையிலான போலீசார் ஆசிரியர் அய்யாசாமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவம் உண்மை என்பது உறுதியானதைத் தொடர்ந்து, அய்யாசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்கவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...