கோவை மாநகராட்சி ஆணையர் மண்டல அளவிலான கபடி போட்டிக்கு தேர்வான மாணவிகளை வாழ்த்தினார்

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், மண்டல அளவிலான கபடி மற்றும் தடகள போட்டிகளுக்கு தேர்வான மூன்று மாணவிகளை வாழ்த்தினார். மாணவிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற ஊக்கமளித்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (05.09.2024), மண்டல அளவிலான கபடி மற்றும் தடகள போட்டிகளுக்கு தேர்வான மூன்று மாணவிகளை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் வாழ்த்தினார்.

மத்திய மண்டலம் அரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவி எஸ். இதழ்யஸ்ரீ, இளையோர் தடகளப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அதேபோல், 10-ம் வகுப்பு மாணவிகளான எஸ். மோனிஷா மற்றும் ஐ.ஜாய்ஸ்மின் ஆகியோர் கபடிப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இம்மூன்று மாணவிகளும் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் பாராட்டினார். மேலும், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டுமென மாணவியர்களுக்கு ஆணையாளர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் வித்யா இராமநாதன் மற்றும் மாநகர கல்வி அலுவலர் குணசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...