கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நீட்டிப்பு கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (பழங்குடியினருக்கானது), மற்றும் வால்பாறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றிற்கு பொருந்தும்.

கோவை அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் டர்னர், மெஷினிஸ்ட், மெக்கானிக், எலெக்ட்ரீஷியன் போன்ற பிரிவுகளில் 6 மாதம், ஓராண்டு மற்றும் ஈராண்டுகள் பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சிகளுக்கான கட்டணம் இலவசமாகும்.

அரசு சார்பில் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவச மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து அட்டை, சீருடைகள், காலணிகள் மற்றும் வரைபடக் கருவிகள் வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த அனைத்து மாணவர்களுக்கும் வளாக நேர்காணல் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்படும் என்பதால், ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு 0422 - 2642041, 88254- 34331, 80727 - 37402 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...