கோவையில் 11, 12 தேதிகளில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

கோவையில் வரும் 11, 12 தேதிகளில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் கூட்டமைப்பு ஆலோசனை, மகளிர் நலத்திட்டங்கள் துவக்க விழா மற்றும் பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.


கோவை: கோவையில் வரும் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்.

11ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக அரங்கில் பல்வேறு தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்துகிறார்.

12ஆம் தேதி காலை 10:00 மணியளவில் ஹிந்துஸ்தான் கல்லூரி அரங்கில் மத்திய மகளிர் நலத்திட்டங்கள் துவக்க விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்கும் மத்திய நிதி அமைச்சர், 1,500 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்குகிறார்.

அதே நாள் மாலையில் பா.ஜ.க கட்சி சார்பில் புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்வு மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு காளப்பட்டி கெட்டிமேளம் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் 25,000 புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைய உள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...