கோவை வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் அருள் சிவா டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றார். திமுக நிர்வாகிகள் பள்ளியில் நேரில் சந்தித்து பாராட்டினர்.
கோவை: கோவை வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் அருள் சிவா, சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் மதிப்புமிக்க டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றார். இந்த விருதினை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வழங்கினார்.
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 6) பள்ளிக்கு வந்த அருள் சிவாவை திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து பாராட்டினர். திமுக காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் தாயனூர் பிரதீப் ஆகியோர் அருள் சிவாவுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர்.
இந்த பாராட்டு நிகழ்ச்சியில் பள்ளியின் மற்ற ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 6) பள்ளிக்கு வந்த அருள் சிவாவை திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து பாராட்டினர். திமுக காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் தாயனூர் பிரதீப் ஆகியோர் அருள் சிவாவுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர்.
இந்த பாராட்டு நிகழ்ச்சியில் பள்ளியின் மற்ற ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.