திருப்பூர் மாவட்டம் உடுமலையில் குடும்பத் தகராறு காரணமாக மாமன் தனது மச்சானை அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இளைஞர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பட்டப்பகலில் குடும்பத் தகராறு காரணமாக ஒரு இளைஞர் மீது அரிவாள் வெட்டு நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை அடுத்த பூளவாடி பொம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (33) என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக போடிபட்டி காமராஜ் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான செந்தில்குமார், அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், செந்தில்குமாரின் மனைவி கலைச்செல்வி, தனது சகோதரர் சதீஷ்குமார் (29) இடம் கணவரின் கொடுமைகள் குறித்து முறையிட்டுள்ளார். இதனையடுத்து, சதீஷ்குமார் தனது மைத்துனர் செந்தில்குமாரிடம் விளக்கம் கேட்க சென்றுள்ளார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த அரிவாளை எடுத்து சதீஷ்குமாரின் கழுத்து மற்றும் கையில் வெட்டியுள்ளார். பலத்த காயமடைந்த சதீஷ்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.
உடனடியாக பொதுமக்கள் சதீஷ்குமாரை மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த உடுமலை காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளியான செந்தில்குமார் தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். செந்தில்குமார் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிகிறது.
இச்சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக நடந்த இந்த வன்முறை சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
உடுமலை அடுத்த பூளவாடி பொம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (33) என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக போடிபட்டி காமராஜ் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான செந்தில்குமார், அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், செந்தில்குமாரின் மனைவி கலைச்செல்வி, தனது சகோதரர் சதீஷ்குமார் (29) இடம் கணவரின் கொடுமைகள் குறித்து முறையிட்டுள்ளார். இதனையடுத்து, சதீஷ்குமார் தனது மைத்துனர் செந்தில்குமாரிடம் விளக்கம் கேட்க சென்றுள்ளார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த அரிவாளை எடுத்து சதீஷ்குமாரின் கழுத்து மற்றும் கையில் வெட்டியுள்ளார். பலத்த காயமடைந்த சதீஷ்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.
உடனடியாக பொதுமக்கள் சதீஷ்குமாரை மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த உடுமலை காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளியான செந்தில்குமார் தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். செந்தில்குமார் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிகிறது.
இச்சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக நடந்த இந்த வன்முறை சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.