மேட்டுப்பாளையம் அருகே குரங்குகள் அட்டகாசம்: பூனை உயிரிழப்பு, நாய்கள் படுகாயம்

மேட்டுப்பாளையம் அருகே கூடுதுறை மலைப்பகுதியில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. ஒரு பூனை உயிரிழந்தது, இரண்டு நாய்கள் படுகாயமடைந்தன. மக்கள் பாதுகாப்பு கோரி வனத்துறையிடம் முறையிட்டுள்ளனர்.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சாரத்துக்குட்பட்ட சமயபுரம் அருகே உள்ள கூடுதுறை மலைப்பகுதியில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இப்பகுதியில் ஒரு பூனை குரங்கால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளது, மேலும் இரண்டு நாய்கள் படுகாயமடைந்துள்ளன.

கூடுதுறை மலைப்பகுதி பவானி ஆற்றின் அருகேயும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியும் அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியின் அமைப்பு காரணமாக குரங்கு உள்ளிட்ட வன உயிரினங்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.



சமீபத்தில், இப்பகுதியில் வசிக்கும் தங்கமணி என்பவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட பூனையை ஒரு குரங்கு தாக்கி, அதன் வயிற்றுப் பகுதியைக் கிழித்துள்ளது. இந்த தாக்குதலில் பூனை உயிரிழந்தது. அதே குரங்கு அருகில் இருந்த இரண்டு நாய்களையும் கழுத்துப் பகுதியில் கடுமையாகத் தாக்கியுள்ளது. இதனால் நாய்களுக்கு கழுத்தில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் அச்சமடைந்த பொதுமக்கள், குரங்குகள் குடியிருப்புகளுக்குள் நுழைந்து குழந்தைகளையும் தாக்க வாய்ப்பு உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். எனவே, வனத்துறை அதிகாரிகள் விரைவில் கூண்டு வைத்து சேட்டை செய்யும் குரங்குகளைப் பிடித்து, அடர் வனப் பகுதிக்குள் விட வேண்டும் என கூடுதுறை மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...