கோவை- பொள்ளாச்சி சாலையில் அதிவேகமாக பேருந்துகளை இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுனர்கள் கைது

கோவை- பொள்ளாச்சி  நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்காக 414 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலையாக விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.



இதற்காக சாலையில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு சாலையை அகலப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. மேலும் சாலையின் இரு புறமும் கற்களை கொட்டி காங்கிரீட் அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் குறுகிய சாலையில் செல்லும் தனியார் பேருந்துகள் அதிக பயணிகளை ஏற்றிச் செல்ல மற்ற தனியார் மற்றும் அரசு பேருந்துகளுடன் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக சாலையில் செல்வதால் அப்பேருந்தில் பயணம் செய்பவர்கள் மட்டுமின்றி அந்த சாலையில் செல்லும் இதர வாகன ஓட்டிகளும் தங்களது உயிரை பணயம் வைக்க வேண்டியுள்ளது.



இதனிடையே, கோவை- பொள்ளாச்சி சாலையில் அதிவேகமாக பேருந்து ஓட்டிய தனியாா் பேருந்து ஓட்டுனர்கள் வைரமுத்து (42), நாகராஜ் (41) ஆகியோா் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொள்ளாச்சி தாலுகா காவல்துறையினர் இன்று அவர்களை கைது செய்யதனர். மேலும், அந்த சாலையில் அதிவேகமாக சென்ற பத்துக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளை கிணத்துக்கடவு காவல் துறையினர் சிறை பிடித்தனர். தொடர்ந்து, அந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை மேர்ட்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், கோவை முதல் பொள்ளாச்சி வரையிலான பேருந்து போக்குவரத்து மிகவும் ஆபத்தான சாகசமாக உள்ளது. தனியார் பேருந்து ஓட்டுனர்கள் தங்களுக்குள் போட்டிபோட்டுக்கொண்டு பயணிகளின் உயிரில் விளையாடி வருகின்றனர். இதனால் கோவை- பொள்ளாச்சி சாலையில் விபத்து அன்றாடக்காட்சியாகி விட்டது. காவல்துறையினர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, அதிவேகமாக செல்லும் பேருந்து ஓட்டுனர்களின் உரிமத்தை ரத்து செய்வதோடு மட்டுமின்றி பேருந்துகளையும் ஜப்தி செய்ய வேண்டும்" என்றனர்.



இதனிடையே விலை உயர்ந்த இரண்டு கார்களில் பொள்ளாச்சி சாலை வழியாக அதிவேகமாக ஓட்டும் போட்டியில் இருவர் ஈடுபட்டுள்ளனர். இதனைதொடர்ந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் உத்தரவின் பேரில் அந்த கார் ஓட்டுனர்களை பிடித்த காவல்துறையினர் அவர்களின் வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...