கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் கோவையில் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டதே கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு.

இக்குழுவினர் வார இறுதிநாளான ஒவ்வொரு ஞாயிறன்றும் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர். அதன்படி கடந்த இரு வாரங்களாக வெள்ளலூர் குளத்தில் களப்பணியில் ஈடுபட்டு சீமைக்கருவேள மரங்களை அகற்றினர். தொடர்ந்து, கடந்த வாரங்களில் ஆத்துப்பாளம் அருகே வெள்ளலூர் தடுப்பணையில் உள்ள சாக்கடை கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இணைந்து லாரிகள் மூலம் குப்பைக் கழிவுகளை அகற்றினர்.

தொடர்ந்து, இந்த வாரம் தூர்வாரும் பணியாக நமது கோவை நமது பசுமை, மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இணைந்து இன்று குனியமுத்தூர் தடுப்பணை மற்றும் 12.5 கிலோமீட்டர் வாய்க்கால் தூர் வாரும் பணி நடைபெற்றது.

இதில், நான்கு குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் குனியமுத்தூர் தடுப்பணை மற்றும் 12.5 கிலோமீட்டர் வாய்க்கால் தூர் வாரப்பட்டது. இப்பணிகளில் 150-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், மூன்று ஜே.சி.பி.இயந்திரங்கள் உதவியுடன் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.


இக்குழுவினர் வார இறுதிநாளான ஒவ்வொரு ஞாயிறன்றும் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர். அதன்படி கடந்த இரு வாரங்களாக வெள்ளலூர் குளத்தில் களப்பணியில் ஈடுபட்டு சீமைக்கருவேள மரங்களை அகற்றினர். தொடர்ந்து, கடந்த வாரங்களில் ஆத்துப்பாளம் அருகே வெள்ளலூர் தடுப்பணையில் உள்ள சாக்கடை கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இணைந்து லாரிகள் மூலம் குப்பைக் கழிவுகளை அகற்றினர்.

தொடர்ந்து, இந்த வாரம் தூர்வாரும் பணியாக நமது கோவை நமது பசுமை, மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இணைந்து இன்று குனியமுத்தூர் தடுப்பணை மற்றும் 12.5 கிலோமீட்டர் வாய்க்கால் தூர் வாரும் பணி நடைபெற்றது.

இதில், நான்கு குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் குனியமுத்தூர் தடுப்பணை மற்றும் 12.5 கிலோமீட்டர் வாய்க்கால் தூர் வாரப்பட்டது. இப்பணிகளில் 150-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், மூன்று ஜே.சி.பி.இயந்திரங்கள் உதவியுடன் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
