உடுமலையில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளை அவமதித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட பொருளாளர் மாலினி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டனம் தெரிவித்தனர். அங்கு, அறிவியலுக்கு புறம்பான மூடநம்பிக்கை கருத்துக்களை மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்தவரை, ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் தட்டிக் கேட்டபோது, அவர் மாற்றுத்திறனாளிகளின் பிறப்பை இழிவுபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.



இந்த சம்பவத்தில் மாற்றுத்திறனாளிகளை அவமதித்த நபர் மீது மாற்றுத்திறனாளி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். மேலும், கேள்வி கேட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியரின் பணியிட மாற்றத்தை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய தொழிற்சங்க மையம் (CITU) திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றிய செயலாளர் கனகராஜ், திருப்பூர் மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...