கோவை மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக வெயில் வாட்டிவரும் நிலையில்
அவ்வப்போது ஒரு சில நிமிடங்கள் மழை பொழிந்து குளிர்வித்து வருகிறது.

இதனிடையே, இன்று கோவையின் சிங்காநல்லூர், பீளமேடு, இராமநாதபுரம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. மேலும், காந்திபுரம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.

சுமார், 40 நிமிடங்களுக்கும் மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்ததால் திருச்சி சாலையில் அமைந்துள்ள பர்க்ஸ் பள்ளியின் அருகே மரம் முறிந்து கீழே விழுந்தது. மேலும், பல இடங்களிலும் மரக்கிளைகள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தன. அவற்றை அகற்றும் பணியில் மீட்புப் படையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தின் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றான சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மழை நீர் வழிந்தோட வழியின்றி அப்பகுதியிலேயே தேங்கின. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

இதனிடையே, இன்று கோவையின் சிங்காநல்லூர், பீளமேடு, இராமநாதபுரம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. மேலும், காந்திபுரம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.

சுமார், 40 நிமிடங்களுக்கும் மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்ததால் திருச்சி சாலையில் அமைந்துள்ள பர்க்ஸ் பள்ளியின் அருகே மரம் முறிந்து கீழே விழுந்தது. மேலும், பல இடங்களிலும் மரக்கிளைகள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தன. அவற்றை அகற்றும் பணியில் மீட்புப் படையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தின் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றான சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மழை நீர் வழிந்தோட வழியின்றி அப்பகுதியிலேயே தேங்கின. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.