நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதை அடுத்து, கோவை சுந்தாராபுரத்தில் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இது கட்சியின் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
கோவை: நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனை அடுத்து கோவை சுந்தாராபுரம் பகுதியில் தவெக கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தற்போது இந்த கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி இருப்பதாக கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தவெக கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சியாக மாறியுள்ளது.
நேற்று முதலே, தவெக தலைமையிடம் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும், வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாராகுமாறும் கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இன்று வெளியான விஜய்யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தவெக கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த அங்கீகாரத்தை அடுத்து தமிழகம் முழுவதும் தவெக கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
கோவையில், குறிப்பாக சுந்தாராபுரம் பகுதியில் தவெக கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.